திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மாணிக்கவாசகர் உற்சவத்தில், நடராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் மார்கழி திருவிழாவில், 9 நாள் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறும். விழாவை முன்னிட்டு, மார்கழி 9 நாளில் 2ம் பிரகாரத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாரதனை. நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.