பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
உடுமலை: உடுமலை, கணியூர் ஜோதி நகரிலுள்ள ஐயப்பன் கோவிலில், தை முதல் நாள், சுவாமிக்கு, நெய் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, ஜோதி தரிசன விழா, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.தை மூன்றாம் நாள், சுவாமி ஐயப்பனுக்கு, மலர் அபிஷேக விழா நடந்தது. அரளி, மல்லி, செவ்வந்தி என, 9 வகையான பூக்கள் கொண்டு, சுவாமிக்கு மலர் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.