* பசித்தவருக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளை நலம் விசாரியுங்கள். * அன்புடன் பழகுபவனும், நல்ல குணம் கொண்டவனே சிறந்த நண்பன். * உழைத்து உண்ணும் உணவே சிறந்தது. * நோன்பு ஒரு கேடயம். அதன் மூலம் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். * நற்செயல்களைச் செய்வதில் உறுதியாக இருங்கள். * மவுனத்தை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை. * ஆசையே தீமைகளின் பிறப்பிடம். * மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். * வியர்வை உலரும் முன்பே உழைப்பவனுக்கு கூலியைக் கொடுங்கள். * உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். * அறிவைத் தேடுகின்ற முயற்சியைக் கைவிடாதீர்கள். நபிகள் நாயகம்