குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2021 12:01
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்ற பாதயாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபட்டனர். பழநி தைப்பூச விழாவில் பங்கேற்க ஏராளமானோர் பாதயாத்திரை செல்கின்றனர்.
இவர்கள் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு வேண்டிய வரத்தை தரும், முருகன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இங்கு முருகனிடம் மனம் உருகி வேண்டி, மிட்டாய் வைத்து வழிபாட்டால் கஷ்டங்கள் நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.இதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை மரத்தில் ஒட்டி வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை வேலப்பரை பாதயாத்திரை பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மருத்துவ சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது.