ஒரு சமயம் இறை இல்லத்தின் வாசலில் ைஷத்தான் நின்றிருந்தான். ‘‘ஏ.. ைஷத்தானே! இங்கு ஏன் நிற்கிறாய்?’’ எனக் கேட்டார் நாயகம். ‘‘இதோ...தொழுகையில் இருப்பவனை கெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றான். ‘‘அதோ! தொழாமல் ஒருவர் உறங்குகிறாரே, அவரை ஒன்றும் செய்யவில்லையே ஏன்?’’ எனக் கேட்டார். ‘‘அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது’’ என்றான். தொழுபவனுக்கு பயப்படாமல், ஏன் உறங்குவனுக்கு பயப்படுகிறாயே?’’ எனக் கேட்டார். ‘‘அப்பாவியான இவன் தொழுதாலும், நற்செயல்களில் ஈடுபட்டாலும் கூட கெடுப்பது எனக்கு சுலபமான விஷயம். ஆனால் துாங்குபவரோ மார்க்க அறிவு கற்றவர். துாக்கம் கலைந்தால் இந்த அப்பாவியை என்னால் கெடுக்க முடியாது. அதனால் அறிவாளிகளைக் கண்டால் அச்சம் வருகிறது’’ என்றான். ஆயிரம் வணக்கசாலிகளை விட ஒரு மார்க்கமேதையே மிக வலிமையானவர்.