* மனமே முதல் பகைவன். கண்டபடி அலையும். தகுதியே இல்லாமல் முடியாததை முடித்து விட நினைக்கும். மனதைக் கட்டுப்படுத்த பழகி விட்டால் பகைவன் ஒழிந்தான் என்று பொருள். * நாக்கு இரண்டாவது பகைவன். ஒருவன் நம்மைத் திட்டுவதாகவே வைத்துக் கொள்வோம். நாய் குரைத்தால் என்ன செய்வோமோ, அதையே அவனிடம் செய்வது நல்லது. அதற்குரிய பின்விளைவை இறைவன் பார்த்துக் கொள்வான் என விட்டு விட வேண்டும். * கோபம் மூன்றாம் பகைவன். இது சற்று கடினம் தான். ஒருவன் நம்மை எதிர்க்கும் போதும், நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் போதும் கோபம் வருகிறது. அப்படி கோபித்தால் அவனுக்கும், நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும். கெட்ட செயல்கள் அனைத்துக்கும் திறவுகோல் கோபம் தான். கோபத்தை புறக்கணிப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம். * ைஷத்தான் நான்காவது பகைவன். மனதை, நாக்கை, கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் அவற்றைச் செய்யவிடாமல் தீமையின் பக்கம் உங்களை இழுக்கும் சக்தி ைஷத்தானுக்கு இருக்கிறது. அவனை தோல்வியுறச் செய்தால் போதும். தலைமைப்பண்புக்கு தகுதியுடையவர் ஆகி விடுவீர்கள்.