* கொடுங்கள். உங்களுக்கும் கொடுக்கப்படும். * தோட்டத்தில் சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்காமல் எளியோருக்கு விட்டு விடுங்கள். * உமக்குள்ளதை விட்டுக் கொடுங்கள். விண்ணகத்தில் செல்வந்தராக வாழ்வீர்கள். * இரக்கமுடன் செயல்படுங்கள். ஆண்டவரின் மனம் மகிழ்ச்சியடையும். * நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். * ஏழ்மைப்பட்டு இளைத்துப்போன சகோதரர்களுக்கு உதவுங்கள். * ஏழைகளுக்கு கொடுப்பவரின் வாழ்வு குறைந்து போவதில்லை. * உதவி கேட்டு வரும் போது கையை மூடிக்கொள்ளாதீர்கள். * கை நிறைய வைத்துக் கொண்டு பிறகு பார்க்கலாம் என மறுக்காதீர்கள். – பொன்மொழிகள்