Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் ... மூங்கில்பட்டில் 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் மூங்கில்பட்டில் 5 கோவில்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் வைகையில் எழுந்தருள உத்தரவிடக்கோரி மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
எழுத்தின் அளவு:
அழகர் வைகையில் எழுந்தருள உத்தரவிடக்கோரி மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
11:04

மதுரை : மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் வைகையில் எழுந்தருளும் திருவிழா நடத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை கோபாலகிருஷ்ண கோன் அறக்கட்டளை அறங்காவலர் அருண் போத்திராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு ஏப்.,8 ல் உத்தரவிட்டது. மனமகிழ் மன்றங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கலையரங்கு, மியூசியங்கள், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழா நடைபெறும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா. கடும் வழிகாட்டுதல்களுடன் விழாவை நடத்த அனுமதிக்கலாம். ஒட்டுமொத்தமாக தடை விதித்தது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மக்களின் உணர்வு, நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

பக்தர்களை அனுமதிக்காமல், அழகர் வைகையில் எழுந்தருளல் திருவிழாவை (ஏப்.,27), கள்ளழகர் கோயில் ஊழியர்கள்/ குருக்கள் பங்கேற்புடன், கொரோனா தடுப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றி நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண் போத்திராஜா குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: வைகையில் தண்ணீர் இல்லை. குப்பைகள் தான் குவிந்துள்ளன. சூழ்நிலை கருதி கொரோனோ கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கருத்து வெளியிட்டனர்.நீதிபதிகள் உத்தரவு: அரசின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar