விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசித்தவருக்கு உணவளிப்பான். ஆனால் அவனது மனைவி புறக்கணித்தாள். ஒருமுறை நாயகத்திடம் தன் நிலையை எடுத்துச் சொன்னான். ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். நீ எப்போது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய் என்றார்.
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்று கிடந்தது. அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின.நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமின்றி நண்பரின் வீட்டிற்கு ஓடினான். நடந்தை விவரித்த அவன், நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து ஏழைகளுக்கு செலவழிப்பேன் என்றான்.
சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுத்து புகழ் பெற்றான். நாயகம் எச்சரித்ததன் பொருள் அப்போது தான் புரிந்தது. உங்களுக்கு கொடுத்த செல்வத்தை என்ன செய்கிறீர்கள் என இறைவன் சோதிப்பான். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். நிச்சயம் நன்மை காண்பீ்ர்கள்
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:06 மணி.