ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி சிவன் கோயிலில் பக்தர்கள் இன்றி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதினத்திற்குப் பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு வழக்கமாக திருவிளக்கு பூஜை நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை. பவுர்ணமி சிறப்பு பூஜை மட்டும் வழக்கம் போல் பக்த ர்கள் இல்லாமல் நடந்தது.