பதிவு செய்த நாள்
04
மே
2021
03:05
திருச்செந்துார்: திருச்செந்துார் வந்த நாகர்கோவில் பகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., எம். ஆர்.காந்தி கோயில் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தார்.
நாகர்கோவில் தொகுதி எம் எல் ஏ . , எம்.ஆர்.காந்தி நேற்று திருச்செந்துார் வந்தார். அவரை பா. ஜ .க. மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்வேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றியத்தலைவர் பால்ராஜ், ஒன்றிய துணைத்தலைவர் நவமணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணித்தலைவர் காத்திகை கந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி திருவாவடுதுறை ஆதீனத்துக்குச்சொந்தமான விசாக கட்டளை மண்டபத்தில் உள்ள சண்முகப்பெருமானை வழிபட்டார். அதன் பின்னர், சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் கொரோனா நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தார்.