பதிவு செய்த நாள்
24
அக்
2021
05:10
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த தீத்தாம்பாளையத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நாளை காலை 4 மணி முதல் 5 30 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீ மகா கணபதி, காமாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
நேற்று மாலை முதல் காலயாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. ஊர்ப் பொதுமக்கள் விநாயகர் கோவிலில் இருந்து கடைவீதி, தாராபுரம் ரோடு முக்கிய வீதி வழியாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்துச் சென்றனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் நான்காம் கால யாக பூஜை, ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், சமித்தன்ன, ஆஜ்ய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 4.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, விமான கோபுர கும்பாபிஷேகம், நடக்கிறது.
இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. 6:30 மணிக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தரிசனம், மகா தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவநாதபுரம், தீத்தாம்பாளையம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.