சென்னை : சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக மூலவர் சன்னதி உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடைபெற்றது.
பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வடபழநி ஆண்டவரை வேண்டிச் செல்கின்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலயம் இன்று நடைபெற்றது. முன்னதாக பாலாலயம் செய்வதற்கு தேவையான புனிதநீர் தாங்கிய கலசங்களுடன் கோயிலின் உள்ளே அர்ச்சகர்கள் வலம் வந்து வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் சன்னதி உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம், யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் (இடமிருந்து) சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா, வடபழனி ஆண்டவர் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சி.லட்சுமணன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.