வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2022 11:01
கடலூர்: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக இன்று வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.