Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுண்டம்மன் அவதார விழா ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் சிறப்பை அறிவோம்! ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்திரபாக்கியம் மற்றும் குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாக சதுர்த்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
12:07

ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி (ஜூலை 22)அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்! நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம். ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமான ஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிப்பர். இதன் பலனால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் குழந்தைப்பேறு உடையவர்கள் குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனுறை நாகநாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தலவரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள ஐந்து தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனுமார் புளியமர வடிவில் காட்சி தருகிறார். ராகுதோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம் ! நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு மணப்பேறும் மகப்பேறும் பலனாகப் பெறுகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று வைகாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
மேலூர்; மேலூரில் நடைபெறும் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து திருமறைநாதர், ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் எட்டு நாட்கள் நடந்த சித்திரை திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள, சார்தாம் எனப்படும் நான்கு புண்ணிய தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar