பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
02:06
புதுக்கடை: அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. விழாவில், ஒவ்வொரு நாளும் காலை கணபதி ஹோமம், பிற்பகலில் அன்னதானமும் நடக்கிறது. ஏழாம் நாளில் காலை ஆதிவாசம் உச்ச காலை வைகுண்டம் விஷ்ணு நம்பூதிரி தலைமையில் புனர்பிரதிஷ்டையும், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆலய போற்றி கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக்கிறது. அன்புமதி முன்னிலை வகிக்கிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், கேரள மாநில ஹிந்து ஐக்கிய வேதிதலைவர் சசிகலா டீச்சர்,நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பா.ஜ., தேசிய செயலாளர் ஹெ ச்.ராஜா, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், கேரள மாநில பா.ஜ.,தலைவர் சுரேந்திரன், தமிழ்நாடு பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் செல்வம், எம்ஆர் காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சுவாமி சைதன்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்குகிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.