துாத்துக்குடி பத்திர காளியம்மன் கோயில் கொடைவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 10:06
துாத்துக்குடி: துாத்துக்குடி மேலச்சண்முகபுரத்தில் உள்ள பத்திர காளியம்மன் கோயில் கொடைவிழா நேற்று கால்நாட்டுடன் துவங்கியது. இதனை ஒட்டி காலையில் அபிஷேகம், மஹாகணபதி பூஜை நடந்தது. பின்னர் காலை விசேஷ பூஜைகள், தீபாரதனையும் கால்நாட்டு விழா நடந்தது. விழாவை ஒட்டி நேற்று மாலை பத்திரகாளியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடக்கிறது. வரும் ஜூலை 5ம் தேதி வரை இரவு ஏழு மணிக்கு முளைப்பாரி கும்மிப்பாட்டு நடக்கிறது. வரும் 2ம் தேதி சிறப்பு திருவிளக்கு பூஜை, 3ம் தேதி கனகாபிஷேகபூஜை, அன்னதானம், 4ம் தேதி கரகத்துடன் அம்மன் வீதி உலா, 5ம் தேதி சாமக்கொடை, 6ம் தேதி பொங்கலிடுதல் நடக்கிறது.