Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்முவில் மோசமான வானிலை: அமர்நாத் ... வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2022
08:07

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஏ. விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் விவசாயம் செழிக்க வேண்டி மானாமதுரையில் இருந்து 15க்கும் மேற்பட்ட புரவிகளை ஏ.விளாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாக தூக்கி சென்றனர்.

மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருடந்தோறும் ஆனி மாதம் விவசாயம் செழிக்க வேண்டியும், நல்ல மழை பொழிய வேண்டியும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு திருவிழாவிற்காக நேற்று காலை ஏ. விளாக்குளம் கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் ஊர்வலமாக மானாமதுரை குலாலர் தெருவிற்கு வந்தடைந்தனர்.அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகள் மற்றும் காளை மாடுகள்,சாமி உருவங்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக,ஆராதனைகள் நடத்தியும் மாலைகள் அணிவித்தும் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளையும்,சுவாமி உருவங்களையும் சுமந்து கொண்டு மேள, தாளங்கள் முழங்க மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் முன்பாக புரவிகளை இறக்கி வைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று புதன்கிழமை கோயில் முன்பாக ஆடு, கோழிகளை பலியட்டும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்துவர்.நாளை(வியாழக்கிழமை) புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு,சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயமும், வடமாடு மஞ்சுவிரட்டும், நாளை மறுநாள்(வெள்ளிகிழமை) ஆட்டுகிடா முட்டு சண்டையும் நடைபெற உள்ளது.விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar