திருமணத்தின் போது தாலி கட்டுவது தான் முத்தாய்ப்பான நிகழ்ச்சி. அந்நேரத்தில் பலரும் பல விஷயங்களை அளந்து கொண்டிருப்பார்கள். அதில் கெட்டதும் இருக்கலாம். அந்த சப்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சப்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசியளிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.