பழநி மலைக்கோயில் தங்க கோபுரம் தூய்மைப்படுத்தும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2022 08:11
பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்க கோபுர தகடுகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோயில் சுதை சிலைகள் புனரமைத்தல், வர்ணம் பூசுதல், கோபுரங்கள் சீரமைத்தல், கட்டிடங்கள் சீரமைத்தல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷப் பணிகள் பெருமளவில் நடைபெற்ற நிலையில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலஸ்தானத்தின் மீதுள்ள தங்க தகடுகள் பதித்த கோபுரம் உள்ளது. இதில் உள்ள தங்க தகடுகளை பணியாளர்கள் தூய்மை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (நவ.23.,) நகை சரிபார்ப்பு அதிகாரி கிருஷ்ணன், நகை சரிபார்ப்பு வல்லுனர்கள் செல்ல பாண்டியன், ராஜேஷ்வரன் ஆகியோர் முன்னலையில் பணியாளர்கள் தங்க கோபுர தகடுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.