Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முக்கண் நாயகன் கொம்பு இல்லாத நந்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடி வந்த தெய்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2023
03:05

திருச்சி அருகிலுள்ள ஆங்கரையைச் சேர்ந்தவர் சங்கீத வித்வான் சாத்துார் ஏ.ஜி.சுப்பிரமணியம். காஞ்சி மஹாபெரியவரின் பக்தையான இவரது தாயார் ‘கோடி ராம நாம ஜப யக்ஞம்’  நடத்தினார். வீட்டில் நடந்த ஜபத்தில் பலரும் கலந்து கொண்டனர். ஒருநாள் அங்கு வந்த பெண் ஒருவரின் கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டு, ‘‘ஏன் அழறே’’ எனக் கேட்ட போது,‘‘ என் வீட்டில் நவராத்திரி கொலுவில் அடுக்கிய பொம்மைகளை பரணில் எடுத்து வைத்தேன். அதில் மஹாபெரியவரின் பொம்மை ஒன்றும் இருந்தது. சாயம் போய் பழசாகிப் போன அதை பெட்டிக்குள் எடுத்து வைக்காமல் ஓரமாக வைத்தேன். தினமும் நாம ஜபம் செய்த பின் இரவில் அதனருகில் செல்லும் போது, ‘‘ என்னை சாத்துார் அம்மாளிடம் சேர்த்து விடு’’ என யாரோ சொல்வது போல் கேட்கிறது. பழைய பொம்மையை எப்படி கொடுப்பது என தயக்கமாக உள்ளது’’ என்றாள். ‘‘அசட்டுப் பெண்ணே! மஹாபெரியவர் இங்கு வர விரும்பினால் அது நான் செய்த புண்ணியமாச்சே! இப்போதே போய் நாம் எடுத்து வரலாம்’’ என்றார் தாயார். அப்படியே செய்ய அதன்பின் நாம ஜபம் சிறப்பாக நிறைவேறியது.

இதற்கு பின்பு, சாத்துார் அம்மாளின் பேரன் வாழ்விலும் இனிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ராம பக்தரான அவர் குடும்பத்துடன் ஓமன் நாட்டில் வாழ்ந்தார். ஒருமுறை தன் வீட்டில் ராமநாம ஜபம் நடத்த இருந்த சமயத்தில் ராமன் என்னும் நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘ எங்கள் வீட்டிலுள்ள பட்டாபிேஷக ராமர் படத்தை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள்’’ என்றார். பேரனும் ஆர்வமுடன் அதை வாங்கி வந்தார். அதில் இருந்த கவர் ஒன்றில், காஞ்சி காமகோடி பீடத்தின் 59 வது பீடாதிபதியான போதேந்திரரின் உருவம் பொறித்த டாலர் இருந்தது. இவர் தான் ராமநாம மகிமையை நாடெங்கும் பரப்பியவர்  அந்தக் காலத்தில் தன் பாட்டிக்கு கொலு பொம்மை வடிவில் வந்த குருநாதர், தற்போது டாலர் வடிவில் தன்னை தேடி வந்ததை எண்ணி பரவசப்பட்டார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar