Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் கவுமாரியம்மன் கோயில் ...  திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
 சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

அவிநாசி அடுத்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழியில் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதிகளிலும் மஹா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேக நிகழ்ச்சி நேற்று சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 32 திரவியங்களில் ஸ்ரீ நடராஜர் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் செண்பகப்பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar