பெயர்ச்சியடைந்தார் குரு பகவான்; ஆலங்குடியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2024 05:05
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் குவிந்தனர். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். இன்று குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சியானார். தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆபத்சகாயேஸ்வரர் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.