Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை ... மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் கோவில் தேர்; கவனிக்க வலியுறுத்தல் மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிதோப்பு அய்யா தலைமைப்பதியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சாமிதோப்பு அய்யா தலைமைப்பதியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 மே
2023
01:05

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 2ம் தேதி கலிவேட்டை நிகழ்ச்சி நடை பெறுகிறது. கொடியேற்றம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடை பெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்தனர். பின்னர் 6 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. திருக்கொடியை குருபால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா யுகேந்த், கிருஷ்ண நாமமணிஆனந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செய்திருந்தனர். கலி வேட்டை பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. 2ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வருகிறார். 3ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தியும், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், 5ம் நாள் பச்சை சாத்தி சப்பரத்திலும், 6ம் நாள் கற்பக வாகனத்திலும், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா வீதி உலா வருகிறார். ஜூன் 2ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார் . இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி நடக்கிறது. தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்படுகிறது. 9ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் இந்திர வாக னத்திலும், அய்யா பவனி வருகிறார். தேரோட்டம் ஜூன் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகனபவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடக் கின்றன. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர்அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைபதி வளாகத்தில் 3 வேளைகளிலும் ப க்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar