Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூடப்பாக்கத்தில் இன்று ரத யாத்திரை: ... ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா: பக்தர்கள் குவிந்தனர்! ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விக்ரகங்கள் பவனி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2012
10:10

மார்த்தாண்டம்: பத்மனாபபுரத்தில் இருந்து வரும் 12ம் தேதி திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும் நவராத்திரி பூஜை விக்ரகங்களுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மனாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தபோது வள்ளியூர் மன்னரிடம் இருந்து அன்பளிப்பாக கிடைத்த சரஸ்வதி அம்மன் விக்ரகம் பத்மனாபபுரம் தேவாரகெட்டு ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அரண்மனையில் நவராத்திரி மண்டபம் கட்டி சரஸ்வதி அம்மன் விக்ரகத்துடன் நவராத்திரி பூஜை நடந்து வந்தது. நாளடைவில் பத்மனாபபுரத்தில் இருந்து தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகு நவராத்திரி பூஜையும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சரஸ்வதி அம்மன் விக்ரகம் திருவனந்தபுரம் நவராத்திரி பூஜைக்காக யானை மேல் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.வேளிமலை முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் அம்மனுடன் செல்கின்றனர். இந்த ஆண்டு வரும் 12ம் தேதி சுவாமி விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. சுவாமி விக்ரகங்களுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி ஐயப்ப சேவா சங்க கூட்டம் பொதுச்செயலாளர் அழகப்பன் தலைமையில் குழித்துறையில் நடந்தது. சேதுகுமார் வரவேற்றார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுவாமி விக்ரகங்களுக்கு சுவாமியார்மடம் சென்று வழக்கம்போல் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சதாசிவன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar