திருவாடானை: தொண்டி அருகே வரவு, செலவு கணக்கில் தகராறையடுத்து, அதிகாரிகளின் சமரத்திற்கு பின், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.சோலியக்குடியில் அய்யனார் கோயில் கட்டபட்டது. இதில் வரவு செலவு தொடர்பாக, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. தாசில்தார் பழனியாண்டி, டி.எஸ்.பி., மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். வரவு- செலவு ஆய்வு செய்யபட்ட பின், சமரசம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை 10.30க்கு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.