Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!
டிசம்பர் 24,2012
அ-
+
Temple images

பழநி: ஐயப்ப பக்தர்கள்வருகையால், பழநிகோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.பழநி மலைகோயில் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்ப சீசன் மற்றும் மார்கழி பூஜையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரோப்கார், "வின்ச் ல் மலைகோயிலுக்கு செல்ல பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்குள் நிலை உள்ளது. பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் அதிகஎண்ணிக்கையில் வருவதால் பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு, அருட்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு, கொடைக்கானல் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளத. கிரிவிதியில் கார், பஸ், வேன்கள் செல்ல அனுமதித்ததால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஐயப்ப சீசன் முடியும் வரை இந்தநிலை தொடரும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.