ராஜபாளையம்: ராஜபாளையம் வள்ளலார் தெரு, உமாமகேஸ்வர விநாயகர் கோயிலில், மழை , உலக அமைதிக்காக, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜை முடிவில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அடுக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வெள்ளான் செட்டியார் சமூகம், வெள்ளான் செட்டியார் சமூக நண்பர்கள் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.