சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் புஷ்பத்தால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை சங்கராபுரம் பருவதராஜகுல சங்கத்தினர் செய்திருந்தனர்.