பதிவு செய்த நாள்
05
மார்
2013
11:03
ஆர்.கே.பேட்டை: கைலாசநாதர் சமேத காமாட்சியம்மன் கோவிலில், உற்சவர் திருவிழா நேற்று நடந்தது.ஆர்.கே.பேட்டை ஓட்டைபிள்ளையார் கோவிலில், கடந்த, 1985ல் மூலவர் விக்ரகம் கொள்ளையடிக்கப்பட்டது. பின், 2005ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மூலவராக கைலாசநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. காமாட்சியம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. தற்போது, உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக, ஊர் பொதுமக்கள் நன்கொடை அளித்தனர். இதையடுத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உற்சவர் மற்றும் காமாட்சியம்மன் விக்ரகங்கள் செய்யப்பட்டன. திருப்பதியில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூர்ணாஹூதி பூஜை நடந்தது.பின் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களால், சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் வாண வேடிக்கையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.