பதிவு செய்த நாள்
18
மார்
2013
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 29ல், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். காலை 10.20 மணிக்கு, சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், செல்லப்பா, சண்முசுந்தரம் ஆகியோர் கொடியேற்றினர். கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன், கண்காணிப்பாளர் பாலலட்சுமி பங்கேற்றனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, மார்ச் 22ல் கைப்பாரம் நிகழ்ச்சி, மார்ச் 26ல் பங்குனி உத்திரம், மார்ச் 27ல் சூரசம்ஹார லீலை, மார்ச் 28 இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 29 மதியம் 12.45 முதல் ஒரு மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாணம், மார்ச் 30ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார்.