Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரைச் சொல்லக் கூட வாய் வலிக்குமா ... காய்ச்சலை குணமாக்கும் சாமி..! காய்ச்சலை குணமாக்கும் சாமி..!
முதல் பக்கம் » துளிகள்
யம பயம் நீங்கும் பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2013
05:03

நாம் பரணி நட்சத்திரம் என்கிறோம். வேதம், அபபரணி என்கிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதை, யமதர்மன்(அபபரணீ நக்ஷத்ரம் யமோ தேவதா). பிறந்தவன் இறப்பான் என்பது நியதி. அதை நடைமுறைப்படுத்துபவன் யமன். உயிரினங்களின் உயிர்களைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பரம்பொருளின் வடிவம், யமன். மரணத்தைச் சந்திப்பவன் மர்த்யன்; அதாவது மனிதன்.

பூமியுடன் இணைந்த விதை முளைத்து, படிப்படியாக வளர்ந்து, பூக்களாகவும் காய்களாகவும் மாறுதல்களைச் சந்தித்து, கடைசியில் பூமியில் சந்தித்து மறைவான் என்கிறது உபநிடதம்(ஸஸ்யமிவமர்த்ய: பச்யதெ ஸஸ்ய மிவாஜாயதெ புன)பிறப்பு- இறப்பு ஆகிய இரண்டு நிலைகளிலும் திரும்பத் திரும்ப நடைமுறைப்படுத்தும் நியதியின் பாப-புண்ணியத்தை முற்றிலும் கரைத்து, அதன்பிறகு என்னை(ஜீவாத்மா) உன்னுள் அடக்கிக் கொள்; அப்போது, மறுபிறவியற்ற பேரின்ப நிலையை எட்டுவேன். அதற்கு உனது அருள் வேண்டும் என்று யமதர்மராஜனைப் பிரார்த்திக்கப் பரிந்துரைக்கிறது வேதம்(அப பாப்மானம் பரணீர் பரந்து) புலப்படும் பிரபஞ்சத்தின் அரசன் நீ. மகான்களுக்கு எல்லாம் மகான். உனது அருள், வீடுபேற்றை அளித்துவிடும் என்று யமதர்மராஜனின் தகுதியை வரையறுக்கிறது வேதம்(லோக ஸ்யராஜா...)

பரணிப் பெண் தரணி ஆளவாள் என்ற சொல், நட்சத்திரத்தின் பெருமைக்குச் சான்று. பரணம் என்றால், ஆட்சி செய்தல் என்று அர்த்தம்.அடக்கியாள்கிற திறமை யமதர்மராஜனின் அருளில் கிடைத்துவிடும். மூன்று தாரைகளை உள்ளடக்கியது பரணி. மேஷ ராசியில் இடம்பிடித்த நட்சத்திரம் இது. எடுத்த காரியத்தைச் செம்மையாக முடித்து வெற்றி பெறுபவன்; உண்மையை உரைப்பவன்; நோய் நொடியின்றி வாழ்பவன்; கெட்டிக்காரன்; மகிழ்ச்சியைச் சந்திப்பவன் என்று பரணி நட்சத்திரக்காரர்களின் இயல்பைச் சொல்கிறார் வராஹமிஹிரர். தைரியம், துணிச்சல், இடம் பொருள் ஏவல் ஆகியவற்றை அறிந்து, சந்தர்ப்பத்துக்கு இணங்க வெற்றியைச் சந்திக்க உண்மையை மறைக்கும் இயல்பு (அதுவும் சில தருணங்களில் அறமாகும்). பிறர் சொத்தைத் தனதாக்கிக் கொள்கிற எண்ணம், சபல புத்தி, எதிரிகளும் ஏவலாளிகளும் அதிகம் கொண்ட நிலை, அசைவ உணவில் அதீத விருப்பம்... ஆகியவை பரணியில் பிறந்தவர்களது இயல்புகள் எனச் சுட்டிக்காட்டுகிறார் பராசர மகரிஷி. பிறந்தவனின் கர்ம வினைக்கு ஏற்ப, மாறுபட்ட இயல்புகள் தோன்றும் என்கிறது ஜோதிடம். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பராசரரின் கணிப்பு அமைந்திருக்கிறது என்பது கவனத்துக்கு உரியது.

பரணியின் முதல் பாதத்தில் தோன்றியவன் தியாகி, 2 -வது பாதத்தில் தோன்றியவன் போகி 3-வது பாதத்தில் தோன்றியவன், தவறான செயலில் ஆர்வம் கொண்டவன். 4-வது பாதத்தில் தோன்றியவன் ஏழ்மையைச் சந்திப்பர் என்று பாதங்களுக்கு உரிய பலனை, பிருஹத் சம்ஹிதையில் வரையறுத்துள்ளார் வராஹமிஹிரர். முதல் பாத்தில் பிறந்தவர் அமைதியை விரும்புவர்; 2-வதில் பிறந்தவர் உண்மை பேசுபவராக இருப்பர். 3-வதில் பிறந்தவருக்கு பெண்ணாசை மேலோங்கியிருக்கும். 4-வதில் பிறந்தவர். சுயமரியாதையைக் காப்பாற்றுவர் எனும் விளக்கம் ஜோதிடத்தில் உண்டு.

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாயாக இருந்தாலும் அம்சகத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய்; இவர்களுக்கு தொடர்பு இருப்பதால்... சாந்தமும் சுறுசுறுப்பும் கொண்டு, சபலக்காரர்களாக, செல்வாக்கு நிறைந்தவராக, தடாலென்று செயல்படும் பலவீனராக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர், முதலில் சுக்கிர தசையைச் சந்திப்பார்கள். எண்ணிக்கையில் அதிக கால அளவு (20 வருடங்கள்) சுக்கிரனுக்கு மட்டுமே உண்டு. உலகவியலில், சுகத்தை அள்ளித் தந்தாலும் ஒருவரின் முடிவையும் இறுதி செய்பவன், சுக்கிரனே. 2-க்கும் 7-க்கும் உடையவனை, மாரகன் என்கிறது ஜோதிடம். ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் (5) அதிர்ஷ்ட ஸ்தானத்திலும் (9) தென்படும் பூரம், பூராடம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களின் தொடர்பு ஒன்றாகவே இருப்பதால், அவற்றுக்கும் தசாகாலங்கள் பரணியைப் போலவே ஏற்படும். ஆகவே பரணி ஜன்ம நட்சத்திரம் என்றால், பூரம் அனுஜன்மம்; பூராடம் த்ரிஜன்மம் என்கிறது ஜோதிடம்.

முதல் ஒன்பது நட்சத்திரத்துக்கு மட்டும் ஆரம்ப தசைகளைச் சொல்லும்; 2-வது ஒன்பது மற்றும் 3-வது ஒன்பது நட்சத்திரங்களுக்குத் தனியே தசைகளைச் சொல்லாமல், ஜன்ம நட்சத்திரத்தின் தசையை எடுத்துக் கொள்ளச் சொல்கிறது ஜோதிடம். இதனால், அந்த மூன்று நட்சத்திரங்களும் பரணி. பூரம், பூராடம் ஜன்ம நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று விடுகின்றன. 1,5,9 ஆகிய இடங்கள், ஒன்றுக்கொன்று முக்கோணத்தில் இணைந்திருக்கும். பிறந்த இடம், அதன் பூர்வ புண்ணியம், அதன் செழிப்பு ஆகியவையே, ஒருவரின் வாழ்நாளில் சந்திக்கும் அத்தனை விஷயங்களுக்கும் அடித்தளமாக அமைகின்றன. நட்சத்திரத்தின் அடிப்படையில், த்ரிகோண மாறுதல் தென்படுவதால், அதன் பங்கு சிறப்பு பெறுகிறது.

நட்சத்திர பாத மாற்றத்தில், பல மாற்றங்கள் நிகழ்வதால், அம்சத்தை இணைத்துப் பலன் சொல்லப் பரிந்துரைக்கிறது ஜோதிடம் (பலமம் சகர்ஷயோ) கண்ணுக்குப் புலப்படாத பூர்வ ஜன்ம கர்ம வினையின் அளவு, அதன் தரம் ஆகியவற்றை 5-ஆம் இடம் வரையறுக்கும் அதன் செழிப்பு, ஏற்றத்தாழ்வு, நடைமுறையில் எட்டுவது-எட்டாதது, வீண் செயல், எதிர்பாராமல் கிடைப்பது, முயற்சியின்றி வந்தது ஆகிய அனைத்தையும் 9-ஆம் இடம் சுட்டிக்காட்டும் மொத்த ராசியையும் எடுத்துக் கொள்ளாமல், நட்சத்திர பாதத்தின் தொடர்பு கொண்ட ராசி பாகத்தை கவனித்து, கர்ம வினையின் உருவத்தை ஊக்கித்துத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு நவாம்சம் உதவுகிறது என்பதால், நட்சத்திர பாதத்தின் பெருமை, புலப்படுகிறது. நிச்சயமாக நடந்தே தீரும் பலனை த்ருட பலன் என்கிறது ஜோதிடம். அதற்கு இடமிருந்தால், பலன் அளிக்கும் என்பதை அத்ருட பலன் என்றும் சந்தர்ப்பம் இருந்தாலும், நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் எனும் பலனை, த்ருடாதிருடம் என்றும் வர்ணிக்கிறது ஜோதிடம். நிச்சியமாக நடக்கும் அதாவது பூர்வ புண்ணியம் அல்லது தங்குதடையின்றிச் செயல்படும் த்ருடபலனை நட்சத்திர திசைகள் வரையறுக்கின்றன (தசா பலேன விசிந்தயேத் த்ருடம்).

கர்ம வினையின் முழுஉருவத்தை வெளியிடும் தகுதி, தசா கிரகங்களுக்கு உண்டு. அந்த தசா வரிசையை நட்சத்திரம் நடைமுறைப் படுத்துவதால், நட்சத்திரத்தின் பங்கு புலப்படுகிறது. அஷ்டவர்க்கத்தை வைத்து கர்மவினையின் அத்ருட பலத்தை, ஊகிக்க வேண்டும். த்ருடம், அத்ருடம் கலந்த பலனை, யோகங்களை வைத்து ஊகிக்கலாம். அஷ்டவர்க்க பலனும் நிச்சியமில்லை; யோக பலனும் நிச்சியமில்லை; என்பதால், தசா பலனின் தகுதி சிறப்பு பெறுகிறது. இந்தச் சிறப்புக்கு ஆதாரம் நட்சத்திரம்.

ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் மாறுபட்ட எண்ணக்கையில் உருப் பெற்றது அஷ்ட வர்க்கம், இடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைக் கொண்டு, உருவானதே யோகம்! இதற்கு அடிப்படை, நட்சத்திரம். அதன் பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத அஷ்ட வர்க்கமும் யோகமும் தசை அளவுக்குச் சிறப்புப் பெறவில்லை. ஆகவே, தசா, பலனை த்ருடம் என்றும், மற்றவற்றை அதிருடம், த்ருடாதிருடம் என்றது ஜோதிடம். யோகம் என்ற பிரிவு, ஜாதகத்தின் கிரக அமைப்பில் உருப்பெற்றது.

கிரகங்களுடன் மட்டும் தொடர்பு உடையது யோகம். தசை கிரகங்களுடன் இணைந்து, நட்சத்திரத்தையும் சேர்த்து தொடர்பு பெற்று, பூர்வ புண்ணியத்தை உள்ளது உள்ளதுபடி வெளியிடுவதால் அதற்குச் சிறப்பு உண்டு. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், எல்லா நட்சத்திரங்களுடனும் ஒரு விதத்தில் தொடர்பு பெற்று, அதன் தாகத்தையும் சேர்த்து கர்மவினைக்கு அனுசரணையாக உகந்த பலனை கிரங்களும் வெளியிடுகின்றன. ஒவ்வொரு தசையிலும் அதன் புத்தியிலும் அந்தரத்திலும் ஒன்பது கிரகங்களும் பங்கு பெறும். ஒன்பது கிரகங்களும், அம்சகத்தின் இணைப்பில் அத்தனை நட்சத்திரங்களுடனும் தொடர்பு கிடைத்து விடும். இப்படியாக, ஒரு தசையில் பலனை இறுதி செய்ய, அத்தனை கிரகங்களின் ஒத்துழைப்பும் தேவை. கூட்டுப் பலன்தான் நடைமுறையில் தென்படும். தனியொரு கிரகத்தின் பலன், நடைமுறையில் பொருந்தாது. அதனால்தான், மேஷம் முதலான வீடுகளுக்கு ராசி என்று பெயர் வைத்தனர்.

ஒரு நெல் மணி, நெற்குவியல் ஆகாது; ஒரு படை வீரன், சைன்யமாகாது. ஒரு தனி மரம், தோப்பாகாது என்பார்கள். தான்ய ராசி, தான்யக் குவியல், காடு, படை போன்றவை கூட்டில் உருப்பெற்றவை. அதுபோல், கூட்டான பலனை அளிப்பது ராசி, மேஷ ராசியில், மூன்று நட்சத்திரம் இருந்தாலும் ஐந்திலும் ஒன்பதிலும் இருக்கும் 3+3 ஆறு நட்சத்திரங்களும் இணைந்தே பலனை இறுதி செய்ய வேண்டியிருக்கு. கிரகங்கள் 9, நட்சத்திரங்கள் 9, நவாம்சகம் 9 என மூன்றும் இணைவதால் ராசி என்ற சொல் சிறப்புப் பெறுகிறது.

சுபகாரியங்களுக்கு விலக்க வேண்டிய நட்சத்திரமாக பரணியைச் சொல்வர். சுபமுகூர்த்தங்களில் பரணி தவிர்க்கப்படும். பிரயாணத்துக்கும் உதவாது. முன்னோர் ஆராதனையில் பரணிக்குப் பெருமை உண்டு. மகாபரணி என பெருமையும் அதற்கு உண்டு. ஆலயங்களில், தீப விழாவின்போது, பரணி தீபம் ஏற்றுவர். பரணி உக்கிரமான நட்சத்திரங்களில் ஒன்று. எதிரிகளை விரட்டியத்தல், பொருட்களை அழித்தல், பிறரின் ஆணைக்கு உட்பட்டு அழிவு வேளையில் ஈடுபடுதல், எதிரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், விஷப் பிரயோகம், அக்னி, ஆயுதம் ஆகியவை இணைந்த வேலைகளைச் செய்தல், சத்ருக்களை அழித்து வெற்றி பெறுதல் ஆகியவற்றுக்கு பரணி நட்சத்திரம் ஒத்துழைக்கும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம்.

பரணியின் தேவதையான யமதர்மராஜனை வணங்குதல் சிறப்புப் பலன்களைத் தரும் மரணத்தை அளிப்பவன் என்ற தவறான எண்ணத்தில், அவனிடமிருந்து விலகி ஓடக்கூடாது. நசீகேதஸுக்கு, யமதர்மராஜன் பேரறிவை வழங்கினான். அவன் மனமிரங்கினால், நம்மிடம் உள்ள யம பயம் அகலும். அவன் உண்மை வடிவானவன். எதிரிகளிடம் இருந்து பயம் விலகினால், மட்டுமே வாழ இயலும்.

யமாய தர்மராஜாய ம்ருத்யவேச அந்தகாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஓளமதும்பராய தத்னா ய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வைநம

என்ற செய்யுளை சொல்லி வணங்கலாம். இயலாதவர்கள், யம் யமாய நம என்ற மந்திரத்தை மனதல் அசை போட்டுப் பிரார்த்திக்கலாம். பரணி நட்சத்திர நாளிலேனும் இந்தச் செய்யுளை சொல்லி வணங்குவது நலம் தரும் யமதர்மராஜனின் அருள், ஆனந்தத்தை வழங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar