திருப்பூர்:கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த சுப்ரமணியர் கோவிவில், 27 வகையான மந்திரங்கள் உச்சரித்து, ஒரே சமயத்தில் 300 அர்ச்சனை செய்யப்படும் "திரிசதை வழிபாடு துவங்கியுள்ளது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "செவ்வாய்தோஷம், பூர்வ புண்ணிய தோஷம், திருமண தடை, கடன் நிவர்த்தி உள்ளிட்ட தடைகளுக்கு நிவர்த்தியாகும், திரிசதை வழிபாடு, செவ்வாய்தோறும் நடத்தப்படுகிறது, என்றனர்.