பதிவு செய்த நாள்
10
மே
2013
10:05
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த் திருவிழா வரும் 17ல் கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது; 24, 25ல் தேரோட்டம் நடக்கிறது. திருப்பூர் நகரில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்மை உடனமர் விஸ்வேஸ்வரர், பூமிநீளாதேவி தாயார், கனகவல்லி தாயார் உடனமர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் 17ம் தேதி, மாலை 6.00 மணிக்கு, செல்லாண்டியம்மன் கோவிலில், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும் 18 மாலை 6.30 மணிக்கு, கொடியேற்றம், 19ம் தேதி, சுவாமி புறப்பாடு, 20ம் தேதி, அதிகாரநந்தி, சேஷ வாகனத்தில் வீதி உலா, 21ம் தேதி, கற்பக விருட்ஷம், 22ம் தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருடசேவை புறப்பாடு, 23ம் தேதி, திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 24ம் தேதி, மதியம் 2.00 மணிக்கு, ஈஸ்வரன் கோவில் தேரோட்டம், 25ம் தேதி, மதியம் 2.00 மணிக்கு, பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. 26ம் தேதி பரிவேட்டை; 27ம் தேதி, தெப்பத்திருவிழா; 28ம் தேதி, மகாதரிசனம்; 29ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மலர் பல்லக்கு; 30ம் தேதி விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி, 17ம் தேதி முதல், 30ம் தேதி வரை, தினமும் மாலை 5.00 மணி முதல், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரத நாட்டிய நிகழ்ச்சி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பாட்டுமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன.வரும் 17ம் தேதி, மாலை 6.00 மணிக்கு, செல்லாண்டியம்மன் கோவிலில், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக தேர்த்திருவிழா துவங்குகிறது.