Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ... ஜம்முவிலிருந்து 3,000 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க யாத்திரை! ஜம்முவிலிருந்து 3,000 பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உண்மையான பக்தனுக்கு மோட்சம் உண்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
10:06

திருப்பூர், பி.என்.,ரோடு சத்ய சாயிபாபா கோவிலில், ஸ்ரீசத்யசாயி சப்தாஹ தேவாமிர்த சொற்பொழிவு நடந்து வருகிறது. சென்னையை சேர்ந்த சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது:பரிசித்த மகாராஜாவை, பாம்பு கடிக்கிறது; அவர் இறக்கிறார். மகன், சிறப்பு வேள்வி நடத்தி, அனைத்து பாம்புகளையும் வரவழைத்து அழிக்கிறார். அவரை கொன்ற தட்சன் என்ற பாம்பு மட்டும் வரவில்லை; பாம்பு இந்திரனிடம் சரணடைந்தது. இந்திரனுடன் வரும்படி, வேள்வி நடத்துகிறான். இந்திரனின் இருக்கையுடன், அதை பிடித்திருந்த பாம்பு வருகிறது. இந்திரன் தப்பித்து ஓடுகிறான். இந்த இடத்தில், இந்திரனிடம் தயை இருந்தது; வீரம் இல்லை. அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சத்ய சாயிபாபாவிடம் சரணடைய வேண்டும்; கர்மயோகம், பக்தி யோகம் இருந்தால், ஞானயோகம் பெறலாம்; சரணாகதி அடையலாம்.கஜேந்திர மோட்சத்தில், விஷ்ணுவுக்கு தினமும் யானை ஒன்று, மலர்களால் பூஜை செய்வது வழக்கம். ஒருநாள் காலையில், பூஜை செய்து கொண்டிருந்தபோது, குளத்து தண்ணீருக்குள் இருந்த முதலை, யானை காலை பிடித்து உள்ளே இழுக்கிறது. யானை கதறுகிறது; விஷ்ணு ஓடி வந்து யானையை காப்பாற்றுவதோடு, சாபத்தால் முதலை உருவம் பெற்ற அரக்கனுக்கு மோட்சமளிக்கிறார். யானை கேட்கிறது, "தினமும் உனக்கு பணிவிடை செய்வது நான்; அவனுக்கு எதற்கு மோட்சம், என்க; அதற்கு விஷ்ணு சொல்கிறார், "அது உனது காலை பிடித்து விட்டது. பக்தன் காலை யார் பிடித்தாலும், அவர்களுக்கு மோட்சம் உண்டு, என்கிறார். சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும்; அது கடவுளுக்காக செய்வதாக எண்ண வேண்டும். உண்மையான பக்தனுக்கு என்றும் மோட்சம் உண்டு. பகவானுக்கு பிடித்ததை மட்டும் செய்ய வேண்டும்; பிடிக்காத எதையும் செய்யக்கூடாது; நீதான் இலக்கு, நீதான் என் வழி என பகவானை நம்ப வேண்டும்.இவ்வாறு, வாசுதேவன் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar