Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லவகுசா பகுதி-21 லவகுசா பகுதி-23 லவகுசா பகுதி-23
முதல் பக்கம் » லவகுசா
லவகுசா பகுதி-22
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2011
12:03

தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் மிருகங்கள் எழுப்பும் ஒலியைக் கொண்டு, அவை எங்கிருக்கின்றன என்பதை அறிந்து, அதைப் பார்க்காமலேயே பாணம் எய்து கொல்லும் வித்தையாகும். இந்த வித்தையைப் பயன்படுத்தி பல மிருகங்களை என் தந்தை ஒரே இடத்தில் நின்றபடி கொன்றார். இதை அவருடன் சென்ற வீரர்கள் போற்றினார்கள், புகழ்ந்தார்கள். புகழ்ச்சி மனிதனை அடிமைப்படுத்தும் கொடிய ஆயுதம். எவன் ஒருவன் புகழின் உச்சிக்கு செல்கிறானோ, அவனைத் தேடி அழிவு வந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். என் தந்தைக்கும் அந்தச் சூழ்நிலையே ஏற்பட்டது.சரயு நதிக்கரையிலுள்ள அடர்ந்த காட்டில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், ஓரிடத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற சப்தம் கேட்டது. அப்போது இரவு நேரம். உங்கள் பாட்டனார், அந்த இடத்தை நோக்கி அம்பு வீசினார். ஐயோ செத்தேன் என்ற குரல், அம்பு பாய்ந்த இடத்தில் இருந்து கூக்குரலாக வெளிப்பட்டது. அவர் பதறிப்போனார். யாரோ ஒரு மானிடனை மிருகமென நினைத்து அம்பெய்தி விட்டோமோ என அலறியடித்து ஓடினார். நதிக்கரையில், தவக்கோலத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு கிடந்தான். அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஐயோ! இந்த இரவு நேரத்தில் ஜனசஞ்சாரமே இருக்காது என எண்ணித்தானே இங்கு வந்தேன். எனக்கு இவ்வுலகத்தில் எதிரியே கிடையாதே. அப்படியிருந்தும், என் மீது அம்பு வீசியவன் யார்? அவனுக்கு நான் எந்த கேடும் விளைவித்தில்லையே! பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே தின்று தவம் செய்யும் ரிஷியான எனக்கு இக்கதியா? என்னைக் கொல்வதால் அவனுக்கு ஏதும் பயன் ஏதும் உண்டா? இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் குரு பத்தினியை கெடுத்ததற்கு ஒப்பான பாவத்தையல்லவா அடைவான்? நான் இறப்பது பற்றி கவலைப்படவில்லை. உயிர்கள் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதியே. ஆனால், என் தாய் தந்தையர் என்ன செய்வர்? அவர்கள் மிகுந்த வயதானவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நான் ஒரே மகனாயிற்றே. அவர்களும் இனி உயிர் வாழமாட்டார்களே! ஒருவன் சற்றும் சிந்திக்காமல், ஒருவனைக் கொலை செய்தால், அவனது குடும்பமே அழிந்துவிடும் என்பதை சற்றாவது யோசித்தானா? என்னைக் கொன்றதன் மூலம், ஒரே பாணத்தில் எங்கள் மூவரையும் கொன்ற பாவத்தை அவன் பெற்றானே? என்னைக் கொன்றவன் நிச்சயமாக அவசரப்புத்தி படைத்தவனாகவும், மூடனாகவும் தான் இருப்பான் என்று புலம்பினான். இந்த புலம்பலைக் கேட்டு என் தந்தை உள்ளம் நொந்து போனார். தர்மப்பிரபுவான அவருக்கு இத்தகைய சோதனை, ஒரு விநாடி புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டதற்காக ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி, அவர் என் தாயைத் திருமணம் செய்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது.

என் தந்தையார் தன்னை யார் என்பதை அவரிடம் அறிமுகப்படுத்தி அந்த தபஸ்வியிடம் மன்னிப்பு கேட்டார். அந்த தபஸ்வியின் மர்ம ஸ்தானத்தில் அம்பு பாய்ந்திருந்தது. இதனால், அவர் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. அந்த இக்கட்டான நிலையிலும், அவர், தசரதா! உடனே என் தாய், தந்தையரிடம் செல். அவர்களிடம் என் மரணத்தகவலைச் சொல். அவர்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் முகரவே இங்கு வந்தேன். அவர்கள் தாகம் தாங்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உன் மன்னிப்பை அவர்களிடம் கேள். இந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் அவர் தங்கியிருக்கிறார். போகும் முன், நீ எய்த பாணத்தை பிடுங்கி எறிந்து விடு. அது எனக்கு தீராத வலியை தருகிறது என்றார். என் தந்தை அந்த பாணத்தை எடுக்கத் தயங்கினார். பிடுங்கினால் உயிர் போய் விடும் என்ற பயம். உருவாவிட்டாலோ வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார். ஒருவேளை உயிர் போனால், ஒரு பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி (கொலை பாவம்) ஏற்படுமோ என்ற தயக்கம். அப்போது அந்த தபஸ்வி, தசரதா! கவலைப்படாதே. உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தாய் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவள். தந்தை வைசியர். என்னை பிராமணன் என நினைத்துக் கொள்ளாதே என சாகும் சமயத்திலும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னார். துன்பம் செய்தும் தனக்கு நன்மையையே நினைத்த அந்த இளைய தபஸ்வியைப் பற்றி அந்த இக்கட்டான நிலையிலும் பெருமைப்பட்ட என் தந்தை, பாணத்தை பிடுங்கினார். அந்த சமயமே அவரது உயிர் பிரிந்தது. பிறகு என் தந்தை, அவனது பெற்றோரை தேடிச்சென்றார். அவர்கள் அருகில் சென்றதும், பார்வையில்லாத அவர்கள், தங்கள் மகன் தான் வந்து விட்டான் என நினைத்து, குழந்தாய்! ஏன் இவ்வளவு நேரம்? நீ இவ்வளவு நேரம் வரவில்லையே என நினைத்து உன் தாய் எவ்வளவு கவலைப்பட்டாள் தெரியுமா? கண்ணில்லாத எங்களுக்கு நீ தானே ஒளியாக இருக்கிறாய்? சீக்கிரம் தண்ணீர் கொடு என்றனர். பயத்தில் இருந்த உங்கள் பாட்டனார் அவர்களின் பாதம் பணிந்து நடந்ததைச் சொன்னார். அறியாமல் செய்த தன் தவறை மன்னித்து கிருபை செய்ய வேண்டினார். அந்த தாயும் தந்தையும் நொறுங்கிப் போனார்கள். அடேய் தசரதா! இப்படி ஒரு கொடிய பாவத்தைச் செய்து விட்டு எங்களிடம் சொல்லாமல் நீ தப்பிப் போயிருந்தால், உன் தலை பத்தாயிரம் துண்டுகளாக வெடித்து சிதறியிருக்கும். ஆனால், அறியாமல் செய்த தவறு என என்னிடம் ஒப்புக்கொண்டதால் நீ இதுவரை பிழைத்திருக்கிறாய். நாங்கள் அவனது உடலைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எங்களை அங்கே அழைத்துப்போ என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே செய்ய அவர் தன் மகனைக் கட்டிக்கொண்டு சொன்ன வார்த்தைகள் இந்த லோகத்திற்கு மிகவும் தேவையானவை. இளைஞர்களான நீங்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். லவகுசர் அதைக் கேட்க ஆர்வமாயினர்.

 
மேலும் லவகுசா »
temple news

லவகுசா பகுதி-1 பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-2 பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-3 பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-4 பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-5 பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar