Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லவகுசா பகுதி-24 லவகுசா பகுதி-26 லவகுசா பகுதி-26
முதல் பக்கம் » லவகுசா
லவகுசா பகுதி-25
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2011
12:03

பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் உணவருந்தும் விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். அந்தநாள் இந்நாள். அதற்காகவே வந்தேன், என்றதும், ராமன் சமையல்காரர்களை வரவழைத்து சுவையான உணவு சமைக்கச் சொன்னார். அந்தக்கணமே, பத்துலட்சம் தங்கப்பானைகள் அடுப்பில் இருந்தன. சுவையான உணவு சிறிது நேரத்தில் தயாரானது. துர்வாசர், உணவருந்தி, ராமனின் கையில் இருந்த கங்கை நீரை வாங்கி கைகழுவினார். பின்னர் சமையல்காரர்களின் தலைவனை அழைத்துப் பாராட்டினார். பின்னர் விடை பெற்றார். எமதர்மராஜாவுக்கு வாக்களித்து விட்டதால், வைகுண்டம் எழுந்தருள வேண்டிய அவசரத்தில் இருந்தார் ராமபிரான். இந்நிலையில், ராமனின் தாய் கவுசல்யா காலமானாள். ராமபிரான் வருந்தித்துடித்தார். என்னை விட்டுச் சென்றாயே தாயே என அழுதார். இதையடுத்து சுமித்திரையும், கைகேயியும் சில நாட்களில் காலமாயினர். தெய்வப்பிறவிகளைப் பெற்றெடுத்த இந்த தாய்மார்கள் தங்கள் ஆயுளை முடித்த பிறகு, தன்னுடன் வந்த லட்சுமணனை வைகுண்டம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ராமன்.

அவன் போய் தானே, அங்கே அவரது படுக்கையாக வேண்டும். எவ்வுலகில் இருந்தாலும், அவரை விட்டு அசையாத கொடுப்பினை உள்ளவன் அல்லவா அவன். இருந்தாலும், பாசம் ராமனின் கண்களைக் குளமாக்கியது. மனிதனாகப் பிறந்து விட்டால், தெய்வம் கூட உணர்வுகளுக்கு ஆளாகி விடுகிறது! ராமபிரானும் இப்போது மனிதர் தானே! தம்பியை வைகுண்டம் அனுப்பப்போவதை எண்ணி அழுதார். அவனை வைகுண்டம் அனுப்பி விட்டு, லவகுசர் உள்ளிட்டோரை ராஜ்ய பரிபாலனத்தில் அமர்த்த ஏற்பாடு செய்தாக வேண்டுமே! லட்சுமணன்- ஊர்மிளா தம்பதிக்கு அங்கதன், சந்திரகேது என்ற மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு, ராமனின் உத்தரவுப்படி, சந்திரகாந்தம் என்ற நாட்டை உருவாக்கினான் பரதன். அதை இரண்டாகப் பிரித்து, சந்திரகாந்தத்தை சந்திரகேதுவிடமும், காரகாபதி என்னும் நகரை தலைநகராகக் கொண்ட பகுதிக்கு அங்கதனையும் அரசனாக்கினான் லட்சுமணன். பரதன்- ....தம்பதிக்கு புஷ்கரன், தக்கன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுக்கு காந்தாரம் என்ற தேசத்தை பகிர்ந்தளித்து மன்னர்களாக்க ராமன் ஏற்பாடு செய்தார். பரதனிடமே இப்பணி ஒப்படைக்கப்பட்டது. இதை பரதன் செய்து முடித்தான். சத்ருக்கன் ஏற்கனவே, லவணன் என்ற அரக்கனைக் கொன்று அவனது மதுபுரி நாட்டைக் கைப்பற்றி அங்கே ஆட்சியில் இருந்தான்.

இவ்வாறாக சின்னத்தம்பி சத்ருக்கனன், மற்ற தம்பிமார்களின் குழந்தைகளுக்குரிய கடமைகளை முடித்த பிறகு, லவகுசர்களைப் பற்றிச் சிந்தித்தார் ராமபிரான்.குடும்பத்தில் மூத்த சகோதரர்கள் இளைய சகோதரர்களின் உரிமைகளைப் பறிக்காமல், அவர்களுக்குரியதை சரிவர செய்து கொடுத்து விட்டால், அங்கே பிரச்னைகளுக்கே இடமிருக்காது என்பதை அந்த ராம சரிதத்தை வேறு எதனால் இவ்வளவு விளக்கமாக சொல்ல இயலும்! ராமச்சந்திர மூர்த்தியை இந்த நாடு அதனால் தானே அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் இருக்கிறது! ஒரு இந்துவானாலும், முஸ்லிமானாலும், பார்சியானாலும் ராமபிரான் எல்லாருக்குமே வழிகாட்டியாகத் திகழ்கிறார், என்று காந்திஜி தெரியாமலா சொன்னார். மரணத்தருவாயில், அவரது வாயில் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் தானே உதிர்ந்தன! எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள். இக்காலத்தில், எந்தக் குடும்பத்திலாவது இப்படி ஒரு அனுசரணையான நிலையைப் பார்க்க முடிகிறதா! அரை அங்குல நிலத்திற்காக, நீதிமன்றங்களில் சகோதரரர்கள் கால் கடுக்க நிற்பதும், ராமன் பிறந்த இந்த தேசத்தில் என்று நினைக்கும்போது, தலை குனியத்தானே வேண்டியிருக்கிறது! ராமபிரான், லவகுசர்களை அயோத்தியின் மன்னர்களாக்க ஏற்பாடு செய்தார். முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக லட்சுமணனை அழைத்தார்.

தம்பி! எனச் சொல்லி அவனை அப்படியே அணைத்துக் கொண்டனர். எப்படி என் வாயாலேயே சொல்வேனடா? என்றதும், லட்சுமணன் கலகலவென சிரித்தான். அண்ணா! என்ன இது புதுப்பேச்சு! தங்களுக்காக நான், எங்களுக்காகவும், இந்த உலகத்திற்காகவும் நீங்கள். நீங்கள் இருந்தால் நாங்கள் உண்டு. நாங்கள் இல்லாமலும், நீங்கள் கணநேரம் கூட உயிர் தரிக்க மாட்டீர்கள். நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்தவர்களல்லவா! உடல்களைத் தவிர நம்மிடம் பகுத்துப் பார்ப்பதற்கென வேறு ஏதுமில்லையே! ஏதோ சொல்ல வருகிறீர்கள்? ஆனால், தயங்குகிறீர்கள்! மனம் திறந்து சொல்லுங்கள், என்றான். தம்பி! நீ வெளியே காவல் நின்ற போது ஒரு முனிவர் வந்தார். அவருடன் நான் தனிமையில் பேசியது உனக்குத் தெரிந்தது தானே என்றார். அதற்கென்ன அண்ணா? என கேள்விக்குறியுடன் அண்ணனின் முகத்தை ஆவலுடன் ஏறிட்ட தம்பியிடம், லட்சுமணா! என் அன்புச்செல்வமே! அவர் வேறு யாருமல்ல. எமதர்மராஜா. நம் பூலோக வாழ்வை முடித்து மேலுலுகம் வரச்சொன்னான். நம் அவதார காலம் முடிந்து விட்டது. ராவணனை வதைக்கவே இங்கு வந்தோம். வந்த வேலை சீதையால் முடிந்தது. அவள் தன் பணி முடித்து ஏற்கனவே சென்று விட்டாள்.

இந்த காரியத்துக்காகவே நம்மைப் பெற்றவர்களும் வைகுண்டத்தில் நமக்காக காத்திருக்கின்றனர். இப்போது, உன் சமயம் வந்துவிட்டது, என்றதும், லட்சுமணன் மேலும் நகைத்தான். அண்ணா! இதைச்சொல்லவா இவ்வளவு தயக்கம்! மரணத்தில் யார் முந்துகிறோம், யார் பிந்துகிறோம் என்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றமே! உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. இது உறுதியானது. இவ்வுலகில் இதைத்தவிர மற்றவை தான் உறுதியற்ற நிலையில் உள்ளன. செல்வம் வரும் போகும், ஆட்சி உங்களைத் தேடி வந்தது, திடீரென பறிக்கப்பட்டது, மீண்டும் வந்தது. இவையெல்லாம் உறுதியற்றவை. உலகில் பிறந்த எல்லா ஜீவன்களுக்கும் ஒரே உறுதி மரணம் மட்டுமே. அதை எனக்கு தாங்களே முன்வந்து தருவது இன்னும் நான் செய்த பாக்கியம். சத்தியத்திற்காகவே நம் தந்தை உயிர்விட்டார். அதைக்காக்கவே நம் தாய்மாரும் உயிர் விட்டார்கள், என்ற லட்சுமணன், நம் தாய் கைகேயி கூட சத்தியம் காக்கவே இவ்வாறு செய்தாள் தெரியுமா? என்றார். எல்லாம் அறிந்த ராமன், ஏதும் தெரியாதவர் போல், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாதது போல் நடித்த சிவனைப் போல் நின்றார்.

 
மேலும் லவகுசா »
temple news

லவகுசா பகுதி-1 பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-2 பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-3 பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-4 பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-5 பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar