Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லவகுசா பகுதி-25
முதல் பக்கம் » லவகுசா
லவகுசா பகுதி-26
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2011
12:03

அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் முக்கியத்துவம தருவதென! ஆனால், தங்களுக்கு முடிசூட்டுவதை அறிந்த அவள், உங்கள் மீது கொண்ட வெறுப்பாலோ, மந்தரையின் தூண்டுதலாலோ தன்னிலையை மாற்றிக் கொள்ளவில்லை. கேகயராஜன், சத்தியவேந்தனான தன் மருமகன் சொன்னது போல் செய்யவில்லையே என நினைத்துக் கொள்வானே என பயந்தே, தன் பர்த்தா சத்தியம் தவறாதவர் என்பதை வெளியுலகுக்கு காட்டவே அப்படி செய்தாள். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த முயற்சியில் நம் தந்தை மறைந்தார். விதி அங்கே விளையாடி விட்டது. அதுபோல், இப்போது என் விதியும் முடிகிறது. தங்களைக் காண நான் வைகுண்டத்தில் காத்திருப்பேன், என்றான். எனினும், ராமபிரான் மிகவும் துன்பப்பட்டார். இந்நேரத்தில் அவருக்கு வசிஷ்டரின் நினைவு வந்தது. அவரிடம், லட்சுமணனை மரணத்தில் இருந்து தடுக்க முடியாதா? எனக் கேட்டார். வசிஷ்டர் ராமனிடம், ராமா! விதி வலியது. ஒரு யாகம் செய்தால் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவன் இறக்க நேர்ந்தால், மற்ற மூவரும் அவனோடு சேர்ந்து மடிவார்கள் என நான் உன் தந்தையிடம் முன்பே சொன்னதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். எனவே, லட்சுமணனுக்கு மட்டுமே மரணம் சம்பவிக்கிறது என நினைக்காதே. ராமா! நீயின்றி அயோத்தி இல்லை. அயோத்தியே இப்போது மரணத்தின் பிடியில் இருக்கிறது, என்றார்.

வசிஷ்டர் கூறியது கேட்ட லட்சுமணன், அண்ணா! நம் குரு வசிஷ்டரே சொன்னபிறகும் என்ன யோசனை? எனக்கு விடை கொடுங்கள், எனக்கூறி சிரித்த முகத்துடன் ராமனை வணங்கினான். அண்ணன் மரணமடையச் சொன்னாலும், அதை இன்முகத்துடன் ஏற்ற தம்பி நம் லட்சுமணன். இவனைப் போன்ற உயர்ந்த மனிதர்களையெல்லாம் இந்த பாரதம் பெற்றிருந்ததால் தான், இந்த கலியுகத்திலும், இந்த தேசத்தில் மட்டும் கலாச்சாரமும், பண்பாடும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அங்கிருந்து விடைபெற்று அயோத்தியின் எல்லைக்குச் சென்றான். சரயுநதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அண்ணன் தன்னை மரணமடையச் சொல்லி கடைசிவரை உத்தரவிடவில்லை என்பதால், அந்த நதியில் மூழ்கி எழுந்து கரையோரத்தில் யோகத்தில் அமர்ந்தான். அப்போது, இந்திரன் தன் விமானத்தில் வந்தான். லட்சுமணனை ஏற்றிக்கொண்டு வைகுண்டம் ஏற்றிப் பறந்தான். இதையறிந்த ராமபிரான், மனம் கலங்கினார். என்னை விட்டு கணநேரமும் பிரியாதவனே! எப்படி உனக்கு என்னைப்பிரியும் மனம் வந்தது? என சொல்லி கண்ணீர் சிந்தினார். அவன் செய்த செயல்களைப் பற்றி அரற்றினார். அவனது பிரிவைத் தாளாமல் பரதனை அழைத்தார். பரதா! இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். லவகுசரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் மனநிலையில் நான் இல்லை. நம் தந்தையின் விருப்பப்படி நீயே மன்னனாக இரு. லட்சுமணனைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவன் போன இடத்துக்கே நான் போகின்றேன், என்றார்.

அண்ணா! என்ன சொன்னீர்கள்? எனக்கதறிய பரதன், இறந்தவன் கீழே விழுவது போல தடாலென விழுந்தான். அண்ணா! என்ன சொன்னீர்கள். கேவலம் இந்த ஆட்சியையா நான் விரும்பினேன்? தாங்கள் காட்டில் வசித்த காலத்திலேயே தங்கள் பாதுகைகளே இந்நாட்டின் ராஜாவாயின. அப்போதும் நான் பதவியை விரும்பவில்லை. இப்போது நீங்கள் கேட்பது, கைகேயி தங்களை காட்டிற்கு அனுப்பக் கேட்ட வரத்தை விட கொடுமையானது. நான் அம்மிக்கல். நீங்கள் மாமலை. நான் மின்மினிப்பூச்சி, நீங்கள் சூரியன். உங்கள் ஆண்மையும் தயாளமும் லவகுசரைத் தவிர வேறு யாருக்குமில்லை. அவர்களுக்கே தாங்கள் முடிசூட்டுங்கள். நானும் உங்களோடு வைகுண்டம் வருவேன், என்றான் கோவென கதறியபடி.பரதனை அப்படியே வாரியணைத்த ராமபிரான், அவனை உச்சி மோந்தார். தம்பி! நம்மில் ஒருவரை ஒருவர் யாராலும் பிரிக்க முடியாது. இருப்பினும், நம் சின்னத்தம்பி சத்ருக்கனன் இங்கே வாழட்டும். அவன் சிறுவன். என்ன பாவம் செய்தான்? வாழ வேண்டிய பருவம் அவனுக்கு, என்ற ராமன், சத்ருக்கனனுக்கு தானும், பரதனும் வைகுண்டம் செல்லப்போகும் செய்தியை ஒரு தூதனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர்களை வரவழைத்தார். அவர்களுக்கு காப்புநாண் அணிவித்தார். குசாபதி என்னும் நகரைத் தலைமையாகக் கொண்ட பகுதிக்கு குசனையும், சிராபதி என்ற நகரைத் தலைமையாகக் கொண்ட உத்தரகோசல நாட்டிற்கு லவனையும் அரசனாக்குவதாக அறிவித்தார். இருவருக்கும் பட்டம் சூட்டப்பட்டது. இதற்குள் சத்ருக்கனனினஜ் மதுகை நகருக்குச் சென்ற தூதுவன், ராமபிரானின் அறிவிப்பைச் சொல்லவே, அந்தக்கணமே தன் தேரில் ஏறி அயோத்தி வந்து சேர்ந்தான் சத்ருக்கனன்.

அண்ணா! நானின்றி தாங்கள் மட்டும் வைகுண்டம் செல்வதா? அண்ணா லட்சுமணர் ஏற்கனவே வைகுண்ட பிராப்தி அடைந்து விட்டாரா? நானின்றி நீங்கள் நிச்சயமாக வைகுண்டம் அடைய முடியாது, என கதறினான். தம்பி! நீ வந்துவிட்டால் மதுகை மக்கள் என்னாவார்கள்? நாடாளும் நீ யோசிக்க வேண்டாமா? என்றதும், அண்ணா! நான் என் மனைவி சுருதகீர்த்தியின் பொறுப்பில் என் மக்களான சுபாகுவையும், சத்துருக்காதியையும் விட்டு வந்தேன். சுபாகுவை மதுகையின் மன்னனாகவும், சத்துருக்காதியை விதிகையை தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் அரசனாக்கி விட்டேன். மொத்தத்தில், நம் பிள்ளைகளின் பொறுப்பில் இந்த தேசம் வந்துவிட்டது. நாம் மகிழ்வுடன் புறப்படுவோம், என்றான். ராம சகோதரர்கள் வைகுண்டம் செல்லப்போவதை எப்படித்தான் அறிந்தார்களோ தெரியவில்லை! இலங்கையில் இருந்து விபீஷணன் வந்து விட்டான். வாயு புத்திரன் அனுமானின் உள்ளம் ஏதோ காரணத்தால் கலங்கவே அவனும் அடுத்த கணமே அயோத்திக்கு வந்து சேர்ந்தான். கரடிகளின் அரசன் சாம்புவன், ராமேஸ்வரம் கடலில் சேதுபந்தனம் கட்டிய நளன், துமிந்தன், நீலன், மயிந்தன், தேவர்களின் அம்சமான வானர வீரர்கள், சுக்ரீவன்...எல்லாரும் வந்து சேர்ந்து விட்டனர். இவர்களில் சுக்ரீவன், ராமா! தாங்கள் இன்றி ஒரு கணமும் உயிர் தரியேன். என் மகன் அங்கதனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டேன். புறப்படுவோமா வைகுண்டத்துக்கு, என்றான். அப்போது அயோத்தி மக்கள் கூட்டமாக வந்தனர்.

எங்கள் ஸ்ரீராமா! நாங்களும் தங்களோடு வைகுண்டம் வருவோம், என்று கோஷமிட்டனர். மரணத்தைச் சந்திக்க எப்படி ஒரு ஆர்வம் பாருங்கள். ஒரு நல்லவன் மரணமடைந்தால், அந்த நாடே மரணமடைகிறது. ராமனுக்காக உயிரையே கொடுத்தவர்கள் நம்மவர்கள். ராமபிரான் அந்த சோகமான நேரத்திலும் தன்னைச் சார்ந்தவர்கள் தன் மீது காட்டிய விசுவாசம் கண்டு பெருமிதமடைந்தார். அனுமானை அழைத்தார். நீ என்னோடு வர வேண்டாம். என்னிடம் ஏற்கனவே, வைகுண்டத்தை விட பூலோகத்தில் ராமநாமம் சொல்வதையே விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாய். சிரஞ்சிவீயே! நீ இங்கேயே தங்கியிரு. இது என் கட்டளை, என்றார். கண்ணீருடன் ஒப்புக்கொண்டார் அனுமான். பின்னர் மக்கள் புடைசூழ அனைவரும் சரயுநதியில் இறங்கினர். லவகுசர் கண்ணீர் வடித்தனர். பிரம்மா வானில் தோன்றி நாராயணனாய் உருமாறிய ராமனை வரவேற்றார். தன்னுடன் வந்தவர்களுக்கு தேவலோகத்தில் ஒரு நகரை நிர்மாணிக்க உத்தரவிட்டார் பகவான். சந்தானம் என்ற அந்த நகரில் அவர்கள் தங்கினர். ஸ்ரீமன் நாராயணன், புன்சிரிப்புடன் சீதையாய் வடிவெடுத்து தனக்காக காத்திருந்த லட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்து அனைவருக்கும் அருள் செய்தார்.

—முற்றும்.

 
மேலும் லவகுசா »
temple news

லவகுசா பகுதி-1 பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-2 பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-3 பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-4 பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் ... மேலும்
 
temple news

லவகுசா பகுதி-5 பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar