ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2,) குடும்பத்தில் குதூகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2014 04:08
நட்புக்கு முன்னுரிமை தரும் ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 4ல் சூரியன் ஆட்சி பெறும் காலம் ஆவணி. அவரால் நன்மை கிடைக்காது என்றுதான் சொல்வார்கள். ஆனாலும் கும்பத்தில் பார்வை விழுவதால் எடுத்த செயலை விரைந்து செய்து முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும்.கேது, சனியாலும் நன்மை உண்டாகும். சனி செப். 9ல் வக்கிர நிவர்த்தியாவதால் நற்பலன் கொடுப்பார். புதன் ஆக. 26ல் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடம் மாறுவது நல்லதல்ல. செப். 1 முதல் சுக்கிரனால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் குதுõகலம் நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு கூடும். ஆக. 26 க்கு பிறகு தம்பதியரிடையே கருத்து வேறுபாடு வரலாம். அடிக்கடி விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் உயரும். பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை செப். 1க்குள் கேட்டு பெற்று கொள்வது நல்லது. அதன் பிறகு பணிச்சுமை அதிகரிக்கலாம். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். சிலருக்கு விரும்பாத இட மாற்றம் கிடைக்கலாம்.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். செப். 1க்கு பிறகு பிரதி பலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கரும்பு, எள், பயறு வகைகள், காய்கறிகள் போன்றவை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் செப். 1க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பெண்கள் மனதில் மகிழ்ச்சி உருவாகும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.
நல்ல நாள்: ஆக. 18,19,23,24,30,31, செப். 1,2,3,8,9,10,11,14, 15,16
கவன நாள்: செப். 4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: துர்க்கை வழிபாட்டால் தைரியம் உண்டாகும். ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவி செய்யுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.