விழுப்புரம்: ஆடி வெள்ளியையொட்டி வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. வாணியம்பாளையம் கங்கை யம்மன் கோவிலில் ஆடி 5ம் வெள்ளியை யொட்டி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் கங்கை அம்மன்சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.