கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று கவுரி விரத பூஜை நடந்தது. காலையில் பெருமாள், தாயார், ஆண்டாள் உற்சவர்களுக்கு அலங்கார திருமஞ்சனம், ஆண்டாள் ”வாமி சன்னதியில் பெண் பக்தர்கள் கவுரி விரத நோன்பு பூஜைகள் செய்தனர். அகல் விளக்கு தீபம் ஏற்றியும் வழிபட்டனர். பெண் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பூஜைகள் செய்து நோன்பு கயிறு கட்டி, ”மங்கலி தாம்பூலங்கள் கொடுத்தனர். பூஜையினை தேசிக பட்டர் செய்து வைத்தார்.