Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்தியத்தை மீறினால் என்ன நடக்கும்? அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்! அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்!
முதல் பக்கம் » துளிகள்
வலிமை மட்டும் போதுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2014
04:11

அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு,  அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே  பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது. சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ஆணவத்தாலும் தேவர்களையும், முனிவர்களையும்  மதிக்காமல் இருந்ததுடன், அவர்களை துன்புறுத்தியும் வந்தான் ராவணன்.

ஒரு சமயம், தன் அமைச்சர் மகோதரனுடன் உலகின் பல இடங்களை சுற்றி வந்தான் ராவணன். அவர்களுடைய பயணம் பாதாள  லோகத்தை அடைந்தது; அங்கே, மகாபலி சக்கரவர்த்தி இருந்தார். மகாபலியைப் பற்றி அறிந்திருந்தாலும், தன் வீரத்தின் பேரில் இருந்த  ஆணவத்தால், நானே ரொம்பப் பெரியவன்; என்னை மிஞ்சிய வீரன் இவ்வுலகில் இல்லை... என்ற எண்ணத்துடன், ராவணன்,  மகாபலியைப் பார்த்து, நான் ராவணன் வந்திருக்கிறேன்... என்றான். மகாபலியோ, ஓ... இலங்கையில் ராவணன் என்ற பெயரில், ஒரு  சிறுவன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; அது நீ தானா... சரி... பக்கத்து அறையில், இரண்டு கடுக்கன்கள் இருக்கின்றன, அவற்றை எடுத்து  வா... என்றார். அந்த அறைக்குச் சென்ற ராவணன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் வெறுங்கையோடு திரும்பி, தன்  இயலாமையை ஒப்புக் கொண்டான்.

மகாபலி சிரித்து, ராவணா... அந்த இரண்டு கடுக்கன்களும், என் கொள்ளுத் தாத்தா இரண்ய கசிபுவினுடையவை; பரந்தாமன், நரசிம்ம  அவதாரம் எடுத்து, இரண்ய கசிபுவை தூக்கிப் பிடித்து சுற்றிய போது, இரண்ய கசிபுவின் காதுகளில் இருந்த கடுக்கன்கள் சிதறி  விழுந்தன. அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தனர் என் முன்னோர். நானும், அவற்றைப் பாதுகாத்து வருகிறேன்; அவற்றைத்  தான், உன்னால் தூக்க முடியவில்லை என்கிறாய்... என்று விவரித்தார். தலை கவிழ்ந்து திரும்பினான் ராவணன். ஆனால், அதிலிருந்து  அவன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. என்னால் தூக்க முடியாத அந்த கடுக்கன்களை அணிந்து, இரண்ய கசிபு நடமாடியிருக்கிறான்;  அவ்வளவு பெரிய பலசாலியான அவனும் அழிந்து போய் விட்டானே... என்று ராவணன் நினைத்திருந்தால் ராவணன் தவறு  செய்திருப்பானா, அவனுக்கு அழிவு தான் வந்திருக்குமா? கடவுள் ஒருவனுக்கு, திறமையைக் கொடுக்கிறார்; ஆணவமும், திமிரும்  தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அழிவைத் தேடிக் கொள்கிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar