ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) மனதில் உற்சாகம் வீட்டில் சுபயோகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 05:12
தனித்தன்மையுடன் பணியாற்றும் ரிஷபராசி அன்பர்களே!
இந்த மாதம் டிச. 25 வரை புதன் சாதகமான இடத்தில் உள்ளார். சுக்கிரன் டிச. 30 ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 11-ல் உள்ள கேது மாதம் முழுவதும் நன்மை அளிப்பார். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார். குரு 3ல் இருந்தாலும், பார்வை பலம் சாதகமாக உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.ஜன. 3க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. உடல்நலம் சீராக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்காமல் போகலாம். எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வகையில் ஆதாயம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
பணியாளர்கள் சக பெண் ஊழியர்களால் நன்மை அடைவர். பணிச்சுமையைச் சந்தித்தாலும். நண்பர்களால் பணத்தை விரயமாகலாம் கவனம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் சீரான பலனைப் பெறுவர்.
மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க நேரிடும். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.