பதிவு செய்த நாள்
09
டிச
2014
05:12
தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே!
டிச. 23 ல் புதன் இடம் மாறுவதால் பணப் பிரச்னை அடியோடு நீங்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன்,பொருள் சேரும். சுக்கிரன் டிச. 30 வரையும், செவ்வாய் 2015 ஜன. 2 க்கு பிறகும் நன்மை தருவார்கள். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் மன உளைச்சலை உருவாக்குவார். ராகு சாதகமாக இருப்பதால் பொருளாதார வளம் சிறக்கும். பிரச்னையை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பெறுவீர்கள். சுக்கிரனால் டிச. 30 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அதன் பின் எதிரி தொல்லை ஏற்படலாம். சூரியனால் சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய், பொருள் களவு, பயண பீதி முதலியன 2015 ஜன. 2க்கு பிறகு இருக்காது.
தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானத்தைக் காணலாம். ஜன. 2க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். டிச. 23க்கு பிறகு நல்ல வளர்ச்சி காண்பர். போலீஸ், ராணுவத்தினர் மிகுந்த நன்மையைப் பெறுவர். வேலைநிமித்தமாக
குடும்பத்தை பிரிந்து சென்றவர் மீண்டும் ஒன்று சேருவர்.
கலைஞர்களுக்கு வாய்ப்பு வசதி பெருகும். டிச. 30க்கு பிறகு சிரத்தை எடுத்து முன்னேற வேண்டிஇருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலனைப் பெறுவர்.
மாணவர்கள் நன்றாகப் படிப்பர். போட்டியில் வெற்றி காண்பர். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். ஜன. 2க்கு பிறகு புதிய சொத்து
வாங்கலாம்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும்.
நல்ல நாள்: டிச.16, 17, 18, 19, 24, 25, 26, 27, 30, 31 ஜன.1, 4, 5, 11, 12, 13, 14
கவன நாள்: டிச. 20, 21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7, 8 நிறம்: பச்சை, நீலம்
வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரனை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். கிருஷ்ணர் வழிபாடு நன்மை அளிக்கும். தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.