பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
திருப்பதி: கடந்த இரு வாரங்களாக, திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் அதிகரித்து உள்ளது.திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இதன்மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, அதிக வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக, திங்கள் கிழமை தோறும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்து வருகிறது.கடந்த வாரம், திங்கள் கிழமை, 3.17 கோடி ரூபாய்; கடந்த திங்கள், 3.12 கோடி ரூபாய் உண்டியல் மூலம் கிடைத்தது.ஆண்டு இறுதி வாரம் என்பதால், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, அதிக அளவில் திருமலைக்கு வருவதால், உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது.