மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். வழிபாட்டுத் தலங்கள் மேன்மை பெறும்.வாகன உற்பத்தி அதிகரிக்கும். புதிய வகை மாடல் வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் வியக்கும் விதத்தில் நம் நாடு முன்னணியில் இருக்கும். தங்கத்தின் விலை சரியும். மக்கள் ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்கும். விளைச்சல் அதிகரிப்பால் விலைவாசி மிகவும் குறையும். கல்வி வளர்ச்சி விகிதம் உயரும். கல்வி நிறுவனங்களில் பண்பாடு, கலாசார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கூடும். பெண்கள் முக்கியமான பதவிகளை ஏற்கும் வாய்ப்பு உண்டாகும்.மக்களுக்குப் பயனுள்ள நல்ல திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி பெறும். இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டும்.சூரியக்கதிர் வீச்சும், வெப்பமும் அதிகப்படியாக இருப்பதால் தோல் சம்பந்தமான நோய்கள் அதிகமாகும்.