திருச்செந்தூர் தைப்பூச திருவிழா: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2015 04:01
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்., 3 ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தருகின்றனர். அதிகாலை நடை திறப்பு:மு ருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா பிப்., 3 ம் தேதி நடக்கிறது. வழக்கமாக கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும்.தைப்பூசத்தன்று அதிகாலை 3 மணிக்க கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 க்கு விஸ்வரூப தீபாரதணை. 4 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9 க்கு உச்சிக்கால அபிஷேகம், 12 க்கு உச்சிக்கால தீபாரதணை நடக்கிறது.
பக்தர்களுக்கு காட்சி: சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி, தீபாரதணை நடக்கும். பின் தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி எட்டு வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் சன்னதி தெரு வழியாக கோயில் வந்து சேருகிறார். பக்தர்கள் பாதயாத்திரை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். பலர் நீண்ட வேலால் அலகு குத்தியும், காவடியுடனும், பலர் அலங்கார தேர்களை இழுத்தும் வருகை தருகின்றனர். தைப்பூசத்தன்று கடலில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.