பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உலக நன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆலங்குப்பம் பாண்டுரங்கன் கோவிலில் உலகநன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு பகவத்பிராத்தனை, எஜமான சங்கல்பம், புண்யாகம் நடந்தது. 9:00 மணிக்கு நரசிம்ம, சுதர்சன ஹோமங்கள் நடத்தப்பட்டு, மதி யம் 12:00 மணிக்கு உற்சவர்களாக ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சனேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இத்துடன் லட்சார்ச்சனையும் சேர்த்து நடந்தது. இரவு 7:00 மணிக்கு அர்ச்சனைகள் பூர்த்தி செய்து சிறப்பு திருவாராதனமும், வேதபிரபந்த சாற்றுமுறையும் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் தெய்வநாயகம், கோவிந்தராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.