Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில் துறைப்பட்டில் பிரதோஷ ... ஊட்டி  பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! ஊட்டி பொக்காபுரம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கற்பூர ஆரத்திக்கு தடை: அர்ச்சகர்களின் உடல்நலம் பாதிப்பு!
எழுத்தின் அளவு:
கோவில்களில் கற்பூர ஆரத்திக்கு தடை: அர்ச்சகர்களின் உடல்நலம் பாதிப்பு!

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

பெங்களூரு: கற்பூரத்திலிருந்து வெளியாகும் புகை, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதால், கார்வார் மாவட்டத்தின் பெரும்பாலான கோவில்களில், கற்பர ஆரத்தி காட்டுவதற்கு, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.
கோவில்களில், பல ஆண்டுகளாக பூஜை செய்துவரும் அர்ச்சகர்களுக்கு, ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் தொந்தரவு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

நல்ல வரவேற்பு: இந்நோய்களுக்கு, கற்பூர ஆரத்தியே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கார்வார் மாவட்டத்தில் உள்ள பல முக்கிய கோவில்களில், கற்பூர தீபாராதனையை தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மக்களிடமிருந்தும், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கற்பூரத்தினால் தோன் றும் புகை, தொடர்ந்து நுரையீரலுக்கு சென்றால் ஆஸ்துமா, அலர்ஜி உட்பட பல நோய்கள் ஏற்படும். மேலும், கற்பூர புகையினால், மூலஸ்தானம் முழுவதும் கறுமை நிறத்தில் சாம்பல் படிகிறது. இதை சுத்தப்படுத்துவது, கோவில் நிர்வாகத்தினருக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. இதனால், கற்பூர ஆரத்தி காட்டுவதற்கு, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். ராமசந்திரபுரா மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கோகர்ணா மகாபலேஸ்வரா கோவிலின் மூலஸ்தானத்தில், சில மாதங்களுக்கு முன், கற்பூர ஆரத்திக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டது.

முக்கிய கோவில்கள்: இடகுஞ்சி மகாகணபதி கோவில், ஹொன்னாவர் தாலுகா முக்வா சுப்ரமண்யா கோவிலிலும், கற்பூர ஆரத்திக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது போன்று கர்நாடகாவின் முக்கிய கோவில்களில், கற்பூர ஆரத்தி தடை செய்யப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என, எதிர்பாக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar