பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
மயிலாப்பூர்: மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில், நேற்று காலை சவுடல் விமானத்தில், கபாலீஸ்வரர் வீதியுலா வந்தார். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன், ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை, 6:30 மணிக்கு, சவுடல் விமானத்தில், கபாலீஸ்வரர் வீதியுலா நடந்தது. இரவு 11:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில், சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று காலை, பல்லக்கிலும், இரவில், யானை வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது.